2025 ஜூன் 25, புதன்கிழமை

வெற்றியை உறுதிப்படுத்த பணியாற்ற வேண்டும்

Suganthini Ratnam   / 2015 ஜூலை 20 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யூ.எல். மப்றூக்

நடைபெறவுள்ள பொதுத்  தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகளில் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட குழுக் கூட்டம் சனிக்கிழமை(18) நிந்தவூரில் நடைபெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு கூறினார்.
 
அவர் மேலும் கூறுகையில்,

'முஸ்லிம் காங்கிரஸ் சார்பான வேட்பாளர்களை நியமித்தமை தொடர்பில் வெளியாகும்  விமர்சனங்களை புறமொதுக்கி விட்டு கட்சியால் எடுக்கப்பட்ட தீர்மானத்தினை வெற்றியடையச்செய்ய அனைவரும்; உழைக்க வேண்டும்.
முஸ்லிம் காங்கிரஸின் பெறுமானமும் மதிப்பும்  எமது கட்சி சார்பாகப் பெறப்படும் வாக்குகளின் எண்ணிக்கையிலும் எமது வேட்பாளர்கள் பெறுகின்ற விருப்பு வாக்குகளிலுமே தங்கியுள்ளது' என்றார்.

'மேலும், ஐக்கிய தேசிய கட்சியோடு இணைந்து போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸானது தனது சார்பில் 03 வேட்பாளர்களையே களமிறக்கியுள்ளது. அவர்களில்; ஒருவரை, சம்மாந்துறைக்கு நாம் வழங்கியுள்ளோம்.

எனவே, இந்தத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரசின் வெற்றியினை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகளில் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .