Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Sudharshini / 2015 ஜூலை 23 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திடீர் எழுச்சி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினரை கதி கலங்கச் செய்துள்ளது என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் வேட்பாளருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.
சாய்ந்தமருதிலுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவட்ட தேர்தல் காரியாலயத்தில் புதன்கிழமை(22) நடைபெற்ற இளைஞர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்,
'முஸ்லிம்களின் விடுதலைக்காகவும் உரிமைகளை நிலைநாட்டுவதற்காகவும்; உருவாக்கப்பட்ட பேரியக்கத்தை இன்று ரவூப் ஹக்கீம், தனது தனிப்பட்ட அபிலாஷைகளுக்காக வியாபாரக் கம்பனியாக மாற்றியுள்ளார்.
இத்தகைய பின்புலத்தில் தான் நான் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து வெளியேறி, மக்கள் காங்கிரஸூடன் இணைந்து கொண்டேன். இன்று எவரும் எதிர்பார்க்காதளவுக்கு மக்கள் காங்கிரஸ் பக்கம் மக்கள் அணித்திரண்டு வருகின்றனர் என்றார்.
மேலும்,அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காகவே நாம் தனித்துப் போட்டியிடுகின்றோம்.
ஐ.தே.க.வில் போட்டியிடுகின்ற மு.கா வேட்பாளர்கள்; எவரும் வெற்றியீட்ட முடியாது. மு.கா மூன்று புள்ளடிக்கு வேலை செய்வது போன்றே சிங்கள வேட்பாளர்கள் மூவரும் இணைந்து ஒற்றுமையுடன் மூன்று புள்ளடிக்கு வேலை செய்கின்றனர். சிங்கள மக்கள் இது விடயத்தில் தெளிவாக உள்ளனர்.
ஆகவே, அம்பாறை மாவட்டத்தில் மூன்று முஸ்லிம்கள் தெரிவாக வேண்டுமானால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியே தெரிவாகும் என்பதை ஹரீஸ் போன்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
36 minute ago
2 hours ago