2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

அறுதிப் பெரும்பான்மையுடன் ஐ.ம.சு.கூ ஆட்சி அமைக்கும்: அதாவுல்லா

Suganthini Ratnam   / 2015 ஜூலை 24 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று  தேசிய காங்கிரஸின் தலைவரும் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட தலைமை வேட்பாளருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டடைப்பின் அம்பாறை மாவட்ட தேர்தல் காரியாலயம் அட்டாளைச்சேனையில் நேற்று  (23) வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. இதில் உரையாற்றகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,  'ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் தேசிய காங்கிரஸும் வியூகங்களை வகுத்து இத்தேர்தலில் போட்டியிடுகின்றன. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சகல மாவட்டங்களிளும் வெற்றி பெறும்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஒருபோதும் தேர்தல்களில் தோற்ற வரலாறே கிடையாது.ஐக்கிய தேசியக் கட்சி நாட்டில் நடைபெற்ற 15 இற்கும்  மேற்பட்ட தேர்தல்களில் தோல்வியை தழுவியுள்ளது.

என்றுமில்லாதவாறு இம்முறை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முஸ்லிம் காங்கிரஸூடன் போட்டி போட்டு தமது வேட்பாளர்களை தேர்தல் களத்தில் இறக்கியுள்ளது. இவை ஒருபோதும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு தேசிய காங்கிரஸூக்கோ பாதிப்பை ஏற்படுத்தாது' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .