Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Thipaan / 2015 ஜூலை 26 , மு.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
அம்பாறை நகர பொலிஸ் பிரிவிலுள்ள கெமுனுபுர பொது விளையாட்டு மைதானத்துக்குள் இன்று ஞாயிற்றுக்கிழமை(26) காலை புகுந்த காட்டு யானை, வயோதிபர் ஒருவரைத் தாக்கியதில் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக அம்பாறை நகர பொலிஸார் தெரிவித்தனர்.
கெமுனுபுரவைச் சேர்ந்த ஜி.பி. விதானகே தர்மதாஸ (வயது 79) என்பவரே உயிரிழந்தவராவார்.
இந்த வயோதிபர், காலை 7.15 மணியளவில் கெமுனுபுர பொது விளையாட்டு மைதானத்தைக் கடந்து செல்ல முற்பட்டபோது, காட்டுப்பக்கமிருந்து மூர்க்கமாக வந்த காட்டு யானை அவரைத் தாக்கியுள்ளது.
ஸ்தலத்திலேயே வயோதிபர் சுருண்டு விழுந்தார் என்ற சம்பவத்தை நேரில் கண்டோர் தெரிவித்துள்ளனர்.
வயோதிபரின் சடலம் அம்பாறை பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டு;ள்ளதாக தெரிவித்த பொலிஸார், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
2 hours ago