Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2015 ஜூலை 26 , பி.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
சவளக்கடை 15ஆம் கொலனிப் பிரதேசத்தில் வேட்பாளர் ஒருவரின் புகைப்படம் மற்றும் அவரது இலக்கம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகளை ஒட்டிய அக்கரைப்பற்றுப் பிரதேசத்தைச் சேர்ந்த 10 நபர்களை கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.யூட்சன், நேற்று சனிக்கழமை (25) தலா 75 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்துள்ளார்.
சவளக்கடை 15ஆம் கொலனிப் பிரதேசத்தில் நேற்று அதிகாலை திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் புகைப்படம் மற்றும் அவரது இலக்கம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த 10 நபர்களையும் சவளக்கடைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து சுவரொட்டிகளும் வான் ஒன்றும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபர்களை கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.யூட்சன் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்திய போதே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
57 minute ago
2 hours ago