Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2015 ஜூலை 26 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.சி. அன்சார்
அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்கள் ஓரணியில் திரண்டு தனித்துவமாக களமிறங்கியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்கு வாக்களித்து மூன்று முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்று புதிய வரலாறு படைக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன், நேற்று சனிக்கிழமை (25) தெரிவித்தார்.
சாய்ந்தமருது சீபிறிஜ் விருந்தினர் விடுதி மண்டபத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
இந்த தேர்தலில் யாரையும் வீழ்த்துவதற்காகவோ எந்தவொரு கட்சியை அழிப்பதற்காகவோ முஸ்லிம் உறுப்பினர்களை தோற்கடிக்கவோ நாங்கள் போட்டியிடவில்லை.
முஸ்லிம் காங்கிரஸ் இன்றியே ஆட்சியமைக்கலாம் என்கின்ற நிலை கடந்த இரு தேர்தல்களில் வெளிப்படையாகவே உணர்த்தப்பட்டுள்ளது. அவ்வாறிருக்கையில் வன்னியில் என்னைத் தோற்கடிப்பதன் ஊடாகவோ அல்லது மட்டக்களப்பில் அமீர் அலியை தோற்கடிப்பதன் ஊடாகவோ அகில இலங்கை மக்கள் காங்கிரஸை அழித்துவிடலாம் என கருதுகின்றனர். பெருந்தலைவரின் மறைவுக்குப் பின்னர் ரவூப் ஹக்கீம் தலைமையில் முஸ்லிம் காங்கிரஸ் இலக்கின்றியே பயணிக்கின்றது.
எதிர்வரும் பொதுத் தேர்தலானது எமது முஸ்லிம் சமூகத்தை பொறுத்தவரையும் மிக முக்கியமானதாகும். சமூகத்தை பற்றி சிந்திக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் தெரிவுசெய்ய வேண்டும்.
எனவே, அம்பாறையில் எமது கட்சியின் மக்கள் ஆதவு நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நாங்கள் இரு ஆசனங்களை பெற்றுக்கொள்ளும் வாய்ப்புள்ளது. அதற்கான சந்தர்ப்பத்தை மக்கள் எமக்கு வழங்க வேண்டும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
2 hours ago