2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

'வாக்குகள் சிதறடிக்கப்படும் அபாயம்'

Suganthini Ratnam   / 2015 ஜூலை 30 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் கட்சிகள் போட்டியிடுவதால், முஸ்லிம்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு நாடாளுமன்ற முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய காங்கிரஸ் தலைவரும் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட தலைமை வேட்பாளருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார்.

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் தேசிய காங்கிரஸ் சாhர்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று புதன்கிழமை ஒலுவிலில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'இம்முறை நாங்கள் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் போட்டியிடுகின்றோம். எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கூடுதலான வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களை கைப்பற்றும்.

எதிர்வரும் தேர்தலில் எமது வேட்பாளர்களுக்கு கூடுதலாக வாக்களித்து ஆட்சியின் பங்காளர்களாக நாமும் ஒன்று சேர்வதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .