2025 ஜூன் 23, திங்கட்கிழமை

மனைவி கொலை: பூசகர் கைது

Gavitha   / 2015 ஓகஸ்ட் 05 , மு.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹூஸைன்

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிள்ளையாரடியில்  தனது மனைவியை கொலை செய்த சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் கணவரான பூசகர், திங்களன்று கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கல்குடா விஷ்னு கோவில் வீதியைச் சேர்ந்த கிருஷ்ணப்பிள்ளை சுதாகரன் (35 வயது) எனும் பூசகரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவராவர்.

மட்டக்களப்பு புலவி பிள்ளையார் கோவிலில் பூசகருடன் வசித்து வந்த பிள்ளையாரடியைச் சேர்ந்த எஸ். உதயவாணி (24 வயது) எனும் பெண், ஞாயிறன்று (02.08.2015) சடலமாக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

ஏற்கெனவே திருமணம் முடித்து 02 பிள்ளைகளுக்கு தந்தையாக இருக்கும் நிலையில் இவர் மேற்படி பெண்ணையும் இரண்டாம் தாரமாக திருமணம் முடித்த நிலையில் மேற்படி கோவில் பூசகர் தங்கும் மடத்தில் இருவரும் வசித்து வந்துள்ளானர்.

கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இவர் மனைவியை கொலை செய்து தூக்கில் தொங்க வைத்து விட்டு தனது மனைவி தற்கொலை செய்துவிட்டார் எனக் கூறி வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளார்.
 
இவரின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட பொது மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து பொலிஸார் குறித்த பூசகரை கைது செய்துள்ளதுடன் இப் பெண்ணின் கொலை தொடர்பில் மட்டக்களப்பு நீதிமன்றத்துக்கு  தெரியப்படுத்தியுள்ளனர்.

ஸ்தலத்திற்கு சென்ற மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் சம்பவம் நடைபெற்ற இடத்தினை பார்வையிட்டதுடன் எதிர்வரும் 06 ஆம் திகதி வரை,  இவர் தொடர்பான மரண விசாரணைகளை ஒத்திவைப்பதாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இதற்கிணங்க பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணின் கணவனான பூசகரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவக்கு பொறுப்பான பொறுப்பதிகாரி சம்பத் பெரேரா தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .