2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

விற்பனைக்கு சாராயம் வைத்திருந்தவருக்கு அபராதம்

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 07 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, ஆலையடிவேம்பு சின்னக்குளம் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில்  விற்பனைக்கு சாராயம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட  ஒருவருக்கு 50,000  ரூபாய் அபராதத்தை அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம்.பஸீல் விதித்துள்ளார்.

அம்பாறை கலால் திணைக்கள அதிகாரிகள் நேற்று (06) மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டார்.

அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம்.பஸீல் முன்னிலையில் இன்று (07) ஆஜர் செய்தபோத, இந்த அபராதம் விதிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X