Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 11 , மு.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.ஜமால்டீன்
அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதான வீதியில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் காரியாலயத்திற்குள்; இரவு நேரத்தில் புகுந்து அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி தளபாடங்களை சேதமாக்கிய இரு சந்தேக நபர்களை எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.முஹம்மட் பஸீல் உத்தரவிட்டார்.
இவர்களை நேற்று (10) நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கடந்த சனிக்கிழமை (08) அதிகாலை கறுப்பு நிற பிக்கப் ரக வாகனத்தில் வந்ததாகக் கூறப்படுமு; ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்கள் 4 பேர் அட்டாளைச்சேனை பிரதான வீதியில் அமைந்துள்ள ஐ.ம.சு.கூட்டமைப்பு தேர்தல் காரியாலயத்திற்குள் புகுந்து அங்கு இருந்தவர்களை அச்சுறுத்தி கதிரைகளை உடைத்து சேதமாக்கிவிட்டு சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக அச்சுறுத்தலுக்குள்ளானவர்கள் அக்கரைப்பற்று பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து பொலிஸார் நான்கு பேரை தேடி வலை விரித்திருந்த நிலையில் இருவரை நேற்று நண்பகல் (10) கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .