2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

போலி தேன் மீட்பு

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 12 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள கடைத்தொகுதிகளிலிருந்து தேன் என்று கூறி சீனிப்பாணி கொண்டு அடைக்கப்பட்ட 11 போத்தல்களையும் உற்பத்தித்தகவல் (சுட்டுத்துண்டு) இடப்படாத 20 மிக்சர் பொதிகளையும் கைப்பற்றியதாக திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.உதயசூரியா தெரிவித்தார்.

இந்தக் கடைத்தொகுதிகளில் நேற்று புதன்கிழமை காலை மேற்கௌ;ளப்பட்ட திடீர்ச் சோதனையின்போது இவை கைப்பற்றப்பட்டு, திருக்கோவில் சுகாதார வைத்தியர் அலுவலகத்துக்கு கொண்டுவந்து அழிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.உதயசூரியா தலைமையில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .