2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

தேர்தல் சட்டங்களை மீறி துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்த 4பேர் கைது

Thipaan   / 2015 ஓகஸ்ட் 16 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

தேர்தல் சட்டங்களை மீறி துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்த வளத்தாப்பிட்டியை சேர்ந்த 4 பேரை சனிக்கிழமை(15) இரவு கைது செய்துள்ளதாக தெரிவித்த சவளக்கடை பொலிஸார், அவர்கள் பயணித்த வானையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தனர்.

சவளக்கடை பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த இரகசிக தகவலையடுத்து சாளம்பைக்கேணி- 05ஆம் கொளனி பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.எம்.நஜீப் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையையும் சவளக்கடை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X