2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

55 மில்லியன் ரூபா செலவில் பாலமுனை கிராம வீதிகள் புனரமைப்பு

Super User   / 2012 மார்ச் 27 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜெய்க்கா திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் பாலமுனை கிராமத்தில் 55 மில்லியன் ரூபா செலவில் வீதிகள் புனரமைக்கப்படவுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் பாலமுனை கிராமத்திலுள்ள சின்ன பாலமுனை மற்றும் அரசயடி வீதி ஆகியனவே புனரமைக்கப்படவுள்ளன.

தேசிய காங்கிரஸின் பாலமுனை அமைப்பாளர் கே.எல்.உபைதுல்லா தலைமையில் நடைபெற்ற வீதி புனரமைப்பு அங்குரார்ப்பண நிகழ்வில் . தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா மற்றும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். (மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரின் ஊடக பிரிவு)




You May Also Like

  Comments - 0

  • சேணையுரான் Wednesday, 28 March 2012 03:43 AM

    அமைச்சரின் சேவை தொடர வாழ்த்துக்கள்

    Reply : 0       0

    சிறாஜ் Wednesday, 28 March 2012 04:33 AM

    அரசு தந்த பணத்துக்கு வேலை செய்யுங்கள்

    Reply : 0       0

    Faazil Wednesday, 28 March 2012 06:25 AM

    இன்னும் எத்தனை நாளைக்கு???

    Reply : 0       0

    சேணையுரான் Wednesday, 28 March 2012 07:16 PM

    அட்டாளைச்சேனை மக்கள் வாக்களித்த முஸ்லிம் காங்கிரஸின் தலைமை எங்கே?

    Reply : 0       0

    சேணையுரான் Wednesday, 28 March 2012 09:29 PM

    மு. கா.வினால் அபிவிருத்தி செய்ய முடியுமா?

    Reply : 0       0

    zeefa Thursday, 29 March 2012 07:12 PM

    இப்பதான் உவைஸ் மீடியாவில் வாறாரு . இப்படி ஒருவர் அக்கரைபட்டில் இருப்பதை சமுகம் பார்ப்பதுக்கு வாய்ப்பளித்த அதாஉல்லா தலைவருக்கு நன்றிகள் வாழ்த்துக்கள்

    Reply : 0       0

    faris Thursday, 05 April 2012 08:40 PM

    அரசாங்கத்தின் பணத்தில்தான் பொதுவான வேலைகள் செய்யவேண்டும். சிராஜ் உங்களுடைய சில கருத்துக்கள் சரி இல்லை. அவர்கள் சேவை செய்யட்டும் விடுங்கப்பா. தமக்கு கிடைத்த சந்தரப்பத்தை சரியான முறைகளில் பயன் படுத்துகின்றார்கள். சிராஜ் ஏன் உங்களுக்கு இந்த கொலைவெறி. கொஞ்சம் அமத்தி வாசிக்கவும். சிலர் பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டிக் கொண்டு நடித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .