Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 13 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி சவளக்கடை பிரதேசத்தில் இறைச்சிக்காக 9 வயதுடைய பசுமாடு ஒன்றை அறுத்த ஒருவருக்கு 2,000 ரூபா தண்டம் விதித்து கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.
9 வயதுடைய பசுமாடு ஒன்றை இறைச்சிக்காக அறுத்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட இந்நபர் இன்று திங்கட்கிழமை கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஜ.எம்.றிஸ்வி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே, நீதிவான் தண்டம் விதித்து தீர்ப்பளித்தார்.
அத்துடன் கைப்பற்றப்பட்ட 50 கிலோ இறைச்சியை உடனடியாக அழிக்குமாறும் நீதிவான், பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரின் 119 என்ற அவசரசேவை தொலைபேசிக்கு கிடைத்த தகவலை அடுத்து சவளக்கடை மாடு அறுக்கும் மடுவத்தை பொலிஸார் சுற்றிவளைத்து சோதனையிட்டனர். இதன்போது 9 வயதுடைய பசுமாடு ஒன்றை அறுத்துக்கொண்டிருந்த ஒருவரை பொலிஸார் கைதுசெய்ததுடன், 50 கிலோ இறைச்சியையும் கைப்பற்றினர்.
இறைச்சிக்காக 12 வயதுக்கு மேற்பட்ட பசுமாடுகளை மாத்திரமே அறுக்க முடியும் என்ற சட்டம் உள்ளது. இந்நபர் இச்சட்டத்திற்கு எதிராக 9 வயதுடைய பசுமாட்டை அறுத்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
hameed Tuesday, 14 February 2012 02:55 PM
மனிதனை கொலை செயும் போதுது என்ன ஏஜ் ????
Reply : 0 0
riswan Tuesday, 14 February 2012 07:52 PM
அறுப்பதுன்னு முடிவு பண்ணிய பின் ஒன்பது என்ன பன்னிரண்டு என்ன? இது சரியான சட்டம் தானா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
2 hours ago
2 hours ago
4 hours ago