2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

9 வயது சிறுமி மீது பாலியல் சேஷ்டை புரிந்த குற்றச்சாட்டில் 63 வயது நபர் கைது

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 07 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

அம்பாறை, நற்பிட்டிமுனை பிரதேசத்தில் உள்ள  ஆசிரியை ஒருவரின் வீட்டிற்கு பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற 9 வயது சிறுமி மீது  பாலியல் சேஷ்டை  புரிந்ததாக கூறப்படும்  63 வயதான  ஒருவரை நேற்று திங்கட்கிழமை மாலை கைதுசெய்துள்ளதாக கல்முனை பொலிஸார்
தெரிவித்தனர்.

குறித்த ஆசிரியையின்  வீட்டிற்கு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற இந்தச் சிறுமி மீது  ஆசிரியையின் கணவர் பாலியல் சேஷ்டை புரிந்ததாக பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த நபர்  கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

You May Also Like

  Comments - 0

  • uthayan Friday, 10 August 2012 02:06 PM

    மனித உருவில் நடமாடும் மிருகங்களை கடுமையாக தன்டிக்க வேன்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .