2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

சிலிண்டர் வெடித்து, 20 பேர் வைத்தியசாலையில் அனுமதி

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 06 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மும்பை;

மும்பையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயமடைந்தோர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  மும்பை அருகேவுள்ள லால்பாக் குடியிருப்புப் பகுதியில் இன்றுக் காலை சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது.

இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 20 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்கள் கிங் எட்வர்ட் நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் விபத்தில் படுகாயமடைந்தவர்களை, மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .