A.K.M. Ramzy / 2021 ஏப்ரல் 06 , பி.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை
தமிழகத்தில் 3 மணி நிலவரப்படி 53.35% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகப்பட்சமாக நாமக்கல்லில் 59.73 சதவீத வாக்குகளும் குறைந்தபட்சமாக நெல்லையில் 41.58 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“தமிழகம் முழுவதும் அமைதியாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. பெரிதாக சட்டம்- ஒழுங்கு பிரச்சினை இல்லை. வாக்குப்பதிவு சுமுகமாக நடக்கிறது.
தமிழகத்தில் 3 மணி நிலவரப்படி 53.35% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக நாமக்கல்லில் 59.73 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக நெல்லையில் 41.58 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன
உதயநிதி ஸ்டாலின் மீதான புகார் குறித்து அறிக்கை கேட்டுள்ளோம். அடுத்து முடிவு செய்வோம். மாலை 6 மணிக்கு மேல் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்தால் டோக்கன் அளித்து வாக்களிக்க வைப்போம். அதன் பின்னர் கடைசியில் கொரோனா வைரஸ் பாதித்த வாக்காளர் வாக்களிக்க வைக்கப்படுவார்கள். பிபிஇ கிட் அணிந்து வரலாம், அல்லது இங்கு தருவோம்”.இவ்வாறு சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago