A.K.M. Ramzy / 2021 ஜனவரி 09 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
பண்டரா:
மஹாராஷ்டிரா மாநிலம் பண்டரா மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பச்சிளங்குழந்தைகள் தீயில் பரிதாபமாக கருகி இறந்தன.
மஹாராஷ்டிராவின் பண்டராவிலுள்ள மாவட்ட பொது மருத்துவமனையில் இன்று அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 10 பச்சிளங் குழந்தைகள் தீயில் கருகி பலியாகினர்.
மொத்தம் 17 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 7 குழந்தைகள் காப்பாற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீவிபத்திற்கான காரணம் குறித்து தகவல்கள் எதுவும் இல்லை. இந்த துயர சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago