2026 மார்ச் 07, சனிக்கிழமை

மல்யுத்த வீரர் சுஷில்குமார் கைது

A.K.M. Ramzy   / 2021 மே 23 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு முறை இந்தியாவுக்காக ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில்குமார் சக மல்யுத்தவீரரை கொலை செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

23 வயது இளம் மல்யுத்த வீரர் சாகர் ராணா மற்றும் அவரது இரண்டு நண்பர்களை டெல்லி சத்ரசால் ஸ்டேடியத்தில் கடந்த மே 4ஆம் திகதி சுஷில்குமாரும் அவரது கூட்டாளிகளும் தாக்கியதாகவும், அதில் காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அதில் சாகர் ராணா மட்டும் உயிரிழந்ததாகவும் டெல்லி பொலிஸ் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக இருந்துவந்த சுஷில்குமார் இன்று மே 23 காலை டெல்லி முண்ட்கா பகுதியில் கைது செய்யப்பட்டதாக  தெரிவிக்கப்படுறது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .