Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஓகஸ்ட் 16 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (17.08.2011)
இன்று கர வருடம் ஆடி மாதம் 32ஆம் நாள் (17.08.2011) புதன்கிழமை. அமிர்த மேல் மரண யோகமும் சதுர்த்தி திதியும் உத்திரட்டாதி நட்சத்திரம் காலை 3.17 மணிவரை பின்பு ரேவதி.
இராகு காலம்: காலை 12.00 முதல் 1.30 மணிவரை.
எமகண்டம்: காலை 07.30 முதல் 09.00 மணிவரை, இரவு 12.00 முதல் 01.30 மணிவரை.
தேய்பிறை சுபமுகூர்த தினம்
நல்ல நேரம்: காலை 09.15 முதல் காலை 10.15 மணிவரை, மாலை 04.45 முதல் மாலை 05.45 மணிவரை.
மேடம்
வியாபாரத்தில் நவீன நுட்பங்களை கையாளுதல், அழகிய ஆடை உபகரணங்கள் கிடைக்கும், புதிய செய்திகள் மகிழ்ச்சி தரும்.
அஸ்வினி: தகவல்
பரணி: அதிர்ஷ்டம்
கிருத்திகை 1ஆம் பாதம்: வாய்ப்பு
இடபம்
மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும், குடும்பத்தில் பெண்களின் ஆதரவு கிடைக்கும், பிரயாணங்கள் செல்வதனால் அனுகூலம்.
கிருத்திகை 2,3,4: நன்மை
ரோகிணி: உதவி
மிருகசீரிடம் 1,2: நிம்மதி
மிதுனம்
பணப் பிரச்சினைகள் சங்கடத்தை ஏற்படுத்தும், நீண்ட தூரத்திலிருந்து செய்திகள் கிடைக்கும், கடின உழைப்பினால் மட்டுமே வெற்றி.
மிருகசீரிடம் 2,3: தகவல்
திருவாதிரை: நட்டம்
புனர்பூசம: விடாமுயற்சி
கடகம்
செயல்களில் தவறுகள் ஏற்படும், பகைவர்களில் குழப்பங்கள் ஏற்படும், அதிக அலைச்சல்களை மேற்கொள்ளல்.
புனர்பூசம்: கலைப்பு
பூசம்: கவலை
ஆயில்யம்: பயம்
சிம்மம்
நல்ல நண்பர்களின் ஒற்றுமை பலம்பெறும், மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும், பொழுதுபோக்குகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.
மகம்: ஆர்வம்
பூரம்: நட்பு
உத்திரம் 1ஆம் பாதம்: நல்ல செய்தி
கன்னி
பொருள் திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு, புதிய தொழில் வாய்ப்புக்கள் பின்தள்ளபடும், சாப்பாட்டில் வெறுப்புத் தன்மை.
உத்திரம் 2,3,4: விருப்பமின்மை
அஸ்தம்: தோல்வி
சித்திரை 1,2ஆம் பாதம்: கவனம்
துலாம்
மனதால் அலைச்சல்கள் தோன்றும், பணம் சேமிப்பதில் கடின உழைப்பு தேவை, அதிக பேச்சுக்கள் மனஸ்தாபத்தை ஏற்படுத்தும்.
சித்திரை 3,4ஆம் பாதம: ஊக்கம்
சுவாதி: பகை
விசாகம் 1,2,3: சிரமம்
விருட்சிகம்
வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும், மனப் பயங்கள் வந்து நீங்கும், முயற்சி செய்த காரியங்கள் நட்டத்தை ஏற்படுத்தும்.
விசாகம் 4: பின்னடைவு
அனுசம்: செலவு
கேட்டை: கலக்கம்
தனுசு
தொழில் ஸ்தானத்தில் புதிய திட்டங்களினால் இலாபம், குடும்பத்தில் உற்றார் உறவினர்களின் வருகை, தனலாபம் ஏற்படும்.
மூலம்: மகிழ்ச்சி
பூராடம்: அந்நியோன்யம்
உத்திராடம் 1ஆம் பாதம்: வரவு
மகரம்
ஒவ்வாத உணவினால் நலன் பாதிப்படைதல், அதிக அலைச்சல்களை மேற்கொள்ளுதல், தீய நண்பர்களின் பேச்சுக்களினால் சங்கடம்.
உத்திராடம் 2,3,4: மன சஞ்சலம்
திருவோணம்: நிம்மதியின்மை
அவிட்டம் 1,2: தேகசுகம்
கும்பம்
பிறரின் மூலம் உதவிகள் கிடைக்கும், இசையில் ஈர்ப்பு அதிகரிக்கும், வினோத விளையாட்டுகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபடலாம்.
அவிட்டம் 3,4: சலுகை
சதயம்: இன்பம்
பூரட்டாதி 1,2,3: மன அமைதி
மீனம்
புதிய திட்டங்கள் அலைச்சலைத் தரும், அனாவசிய பேச்சுக்கள் மனஸ்தபாத்தை ஏற்படுத்தும், மன உளைச்சல்கள் ஏற்படுதல்.
பூரட்டாதி 4: கஷ்டம்
உத்திரட்டாதி: சிரமம்
ரேவதி: நாவடக்கம்
12 minute ago
57 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
57 minute ago
2 hours ago