2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

இன்றைய பலன்கள் (23.06.2011)

A.P.Mathan   / 2011 ஜூன் 22 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய பலன்கள் (23.06.2011)

இன்று கர வருடம் ஆனி மாதம் 08ஆம் நாள் (23.06.2011) வியாழக்கிழமை. சித்த யோகமும் அஷ்டமி திதியும் பூரட்டாதி நட்சத்திரம் காலை 10.10 மணிவரை, பின்பு உத்திரட்டாதி.

இராகு காலம் : காலை 1.30 முதல் 3.00 மணிவரை.
எமகண்டம் : காலை 6.00 முதல் 7.30 மணிவரை, இரவு 10.30 முதல் 12.00 மணிவரை.
நல்ல நேரம் : காலை 10.30 முதல் 11.30 மணிவரை, மாலை 12.30 முதல் 1.30 மணிவரை.



மேடம்
உல்லாச பயணங்கள் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும், பெண்களின் அனுசரணை கிடைத்தல், புதிய இடமாறுதல்கள் ஏற்படும்.
அஸ்வினி: நன்மை
பரணி: சுபம்
கிருத்திகை 1ஆம் பாதம்: பிரயாணம்


இடபம்
அஜீரணம் சம்பந்தமான கோளாறுகளினால் சாப்பாட்டில் வெறுப்பு தன்மை, தீய நண்பர்களின் சகவாசங்களை தவிர்க்கவும், மனக் குழப்பங்கள்.
கிருத்திகை 2, 3, 4: குழப்பம்
ரோகிணி: துன்பம்
மிருகசீரிடம் 1, 2: மனக்கஷ்டம்


மிதுனம்
தூய்மையான ஆடைகளை அணியலாம், நிம்மதியான தூக்கம் நிறைவாக கிடைக்கும், புதிய வாய்ப்புக்கள் தேடி வருதல்.
மிருகசீரிடம் 2, 3: மகிழ்ச்சி
திருவாதிரை: தொடர்புகள்
புனர்பூசம்: மனஅமைதி


கடகம்
தொலைந்த பொருள் மீண்டும் கிடைக்கும், பிறருடன் அதிக பேச்சுவார்த்தைகளை தவிர்க்கவும், மனக் குழப்பங்கள் ஏற்படும்.
புனர்பூசம்: சிரமம்
பூசம்: விவாதம்
ஆயில்யம்: பயம்


சிம்மம்
இசையில் அதிக நாட்டம் காட்டுதல், பொழுதுபோக்குகளில் ஈடுபடும் போது மிக கவனம் தேவை, புதிய முயற்சிகளினால் முன்னேற்றம்.
மகம்: புதிய வழி
பூரம்: இன்பம்
உத்திரம் 1ஆம் பாதம்: வெற்றி


கன்னி
இறை பிரார்த்தனையின் பலனாக மகான்களின் தரிசனம் கிடைக்கும், பணவரவு ஏற்படும், புதிய முயற்சிகளினால் முன்னேற்றம்.
உத்திரம் 2, 3, 4: நன்மை
அஸ்தம்: அனுகிரகம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: லாபம்


துலாம்
ஆலய அனுஷ்டானங்கள் மனஅமைதி தரும், குடும்பத்தில் சொந்தங்களின் வருகை, இன்பமான தூக்கம் கிடைக்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: சந்தோஷம்
சுவாதி: வழிபாடுகள்
விசாகம் 1, 2, 3: அன்யோன்யம்


விருட்சிகம்
விசித்திரமான பொருள் காணக் கிடைத்தல், பெண்களுடன் அனுசரித்து நடப்பது நன்று, தேவையற்ற பிரச்சினைகளினால் கவலை.   
விசாகம் 4: ஆச்சரியம்
அனுசம்: பொறுமை
கேட்டை: சிக்கல்


தனுசு
குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் காணப்படும், பெண்களின் சலுகைள் கிடைக்கும், சில இடமாற்றங்கள் ஏற்படும்.
மூலம்: மேன்மை
பூராடம்: இன்பம்
உத்திராடம் 1ஆம் பாதம்: உதவி


மகரம்
பெரியார் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து செயல்படவும், உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும், மனபயங்கள் தோன்றும்.
உத்திராடம் 2, 3, 4: உயர்வு
திருவோணம்: கலக்கம்
அவிட்டம் 1, 2: நல்வழி


கும்பம்
அரசாங்க வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும், உற்சாகத்துடன் நல்ல காரியங்களில் ஈடுபடலாம், நண்பர்கள் தேடி வருதல். 
அவிட்டம் 3, 4: நட்பு
சதயம்: புத்துணர்ச்சி
பூரட்டாதி 1, 2, 3: ஆதாயம்


மீனம்
கேட்பார் பேச்சை கேட்டு நடப்பதனால் துன்பம், உடல் சோர்வுகள் வந்து நீங்கும், ஆலய வழிபாடுகள் மன அமைதி தரும்.
பூரட்டாதி 4: பிரார்த்தனை
உத்திரட்டாதி: சுகயீனம்
ரேவதி: கஷ்டம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .