2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

இன்றைய பலன்கள் (27.07.2011)

Menaka Mookandi   / 2011 ஜூலை 26 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய பலன்கள் (27.07.2011)

இன்று கர வருடம் ஆடி மாதம் 11ஆம் நாள் (27.07.2011) புதன்கிழமை. சித்த யோகமும் துவாதசி திதியும் ரோகிணி நட்சத்திரம் காலை 06.30 மணிவரை பின்பு மிருகசீரிடம்.

ராகு காலம்: காலை 12.00 முதல் 1.30 மணிவரை.
எமகண்டம்: காலை 07.30 முதல் 09.00 மணிவரை, இரவு 12.00 முதல் 01.30 மணிவரை.
நல்ல நேரம்: காலை 09.15 முதல் காலை 10.15 மணிவரை, மாலை 04.45 முதல் மாலை 05.45 மணிவரை.

மேடம்
புதிய காரியங்களை உடனுக்குடன் முடித்தல், பணவரவுகள் கிடைக்கும், தீயவர்களினால் பிரச்சினைகள் ஏற்படும்.
அஸ்வினி: வெற்றி
பரணி: பொறுமை
கிருத்திகை 1ஆம் பாதம்: அனுகூலம்


இடபம்
அதிக செலவினால் பணப் பிரச்சினைகள் ஏற்படும், புதிய வேலை முயற்சிகளை மேற்கொள்ளல், பிறரின் உதவிகள் கிடைக்கும்.
கிருத்திகை 2,3,4: சலுகை
ரோகிணி: சேமிப்பு குறைதல்
மிருகசீரிடம் 1,2: முயற்சி


மிதுனம்
பெண்களுடன் கருத்து வேற்றுமைகள் ஏற்படும், காணாமல் போன பொருள் கிடைக்கும், உடல் ஆரோக்கியம் பாதிப்படைதல்.
மிருகசீரிடம் 2,3: சோர்வு
திருவாதிரை: மனக் கவலை
புனர்பூசம்: சுகயீனம்


கடகம்
வியாபார விருத்தியினால் அதிக இலாபம் ஏற்படும், தனவரவு ஏற்படும், பொழுது போக்குகளில் நாட்டம் காட்டுதல்.
புனர்பூசம்: ஆர்வம்
பூசம்: அதிர்ஷ்டம்
ஆயில்யம்: சந்தோஷம்


சிம்மம்
உயர் உத்தியோகஸ்தரால் ஆதாயம் உண்டு, சாதுக்களை தரிசித்து ஆசீர்வாதம் பெறலாம்,  முயற்சி செய்த காரியத்தில் வெற்றி.
மகம்: வாய்ப்பு
பூரம்: அனுக்கிரகம்
உத்திரம் 1ஆம் பாதம்: நன்மை


கன்னி 
தூய்மையான ஆடைகளை அணியலாம், குடும்ப உறவினர்களின் ஒற்றமை பலப்படும், நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
உத்திரம் 2,3,4: மகிழ்ச்சி
அஸ்தம்: மனநிறை
சித்திரை 1,2ஆம் பாதம்: சுபம்


துலாம்
அனாவசிய பிரச்சினைகளை பேசுவதால் சங்கடம், தெய்வீக சிந்தனைகள் தியானங்கள் மன அமைதி தரும், மன அழுத்தங்கள் ஏற்படும்.
சித்திரை 3,4ஆம் பாதம்: குழப்பம்
சுவாதி: கஷ்டம்
விசாகம் 1,2,3: வழிபாடுகள் 


விருட்சிகம்
அழகிய ஆடை உபகரணங்கள் கிடைக்கும், நண்பர்களின் மூலம் செய்திகள் கிடைக்கும், வியாபரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
விசாகம் 4: நற்செய்தி
அனுசம்: மேன்மை
கேட்டை : அதிர்ஷ்டம்


தனுசு
பெரியோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து செயற்படவும், சேமிப்புக்கள் அதிகரிக்கும், மனப் பயங்கள் ஏற்படுதல்.
மூலம்: வரவு
பூராடம்: ஆலோசனை
உத்திராடம் 1ஆம் பாதம்: தடுமாற்றம்


மகரம்
அரசாங்க தொழில் வாய்ப்புக்கள் கிடைத்தல், உற்சாகத்துடன் புதிய முயற்;சிகளில் ஈடுபடல், இறைவழிபாடுகளில் நாட்டம் அதிகரிக்கும்.
உத்திராடம் 2,3,4: அனுகூலம்
திருவோணம்: புத்துணர்ச்சி
அவிட்டம் 1,2: நன்மை


கும்பம்
தொலைந்;த பொருள் மீண்டும் கிடைத்தல், பெண்களுடன் அனுசரித்து நடக்கவும், சரும நோய்கள் ஏற்பட்டு நீங்கும்.
அவிட்டம் 3,4: சுபம்
சதயம்: நாவடக்கம்
பூரட்டாதி 1,2,3: உபாதைகள்


மீனம்
வியாபாரத்தில் நல்ல வாய்ப்புக்களினால் மேன்மை, குடும்பத்தில் சுற்றத்தின் நண்பர்களின் வருகை, தனலாபம் ஏற்படும்.
பூரட்டாதி 4: இலாபம்
உத்திரட்டாதி: சந்தோஷம்
ரேவதி: அந்நியோன்னியம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .