2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

இன்றைய பலன்கள் (29.08.2011)

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 28 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (29.08.2011)   
                                      
இன்று கர வருடம் ஆவணி மாதம் 12ஆம் நாள் (29.08.2011) திங்கட்கிழமை. மரண மேல் சித்த யோகமும் அமாவாசை திதியும் மகம் நட்சத்திரம் மாலை 01.07 மணிவரை பின்பு பிரதமை.

ராகு காலம்: காலை 7.30 முதல் காலை 9.00 மணிவரை.
எமகண்டம்: காலை 10.30 முதல் 12.00 மணிவரை, இரவு 3.00 முதல் 4.30 மணிவரை.
நல்ல நேரம்: காலை 6.15 முதல் காலை 07.15 மணிவரை, மாலை 4.45 முதல் மாலை 5.45 மணிவரை.



மேடம்
வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும், மனதில் பயம் உணர்வு ஏற்படும், அதிக அலைச்சல்களை மேற்கொள்ளுதல்.
அஸ்வினி: சிரமம்
பரணி: கலக்கம்
கிருத்திகை 1ஆம் பாதம்: விரயம்


இடபம்
பெண்களுடன் அதிக பேச்சுக்கள் சங்கடத்தை ஏற்படுத்தும், மனதால் கஷ்டம், தேக ஆரோக்கியம் பாதிப்படைதல்.
கிருத்திகை 2, 3, 4: கவலை
ரோகிணி: உபாதை
மிருகசீரிடம் 1, 2: நாவடக்கம்


மிதுனம்
உல்லாச பிரயாணங்கள் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும், இடமாற்றங்கள் ஏற்படும், சுவையான ஆகாரம் கிடைத்தல்.
மிருகசீரிடம் 2, 3: மகிழ்ச்சி
திருவாதிரை: ஆரோக்கியம்
புனர்பூசம்: நன்மை


கடகம்
பெரியோர்களின் வழிநடத்தல்கள் நம்பிக்கை தரும், நவீன நுட்பங்களை கையாளுதல்,  உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும்.
புனர்பூசம்: இலாபம்
பூசம்: விடாமுயற்சி
ஆயில்யம்: எதிர்ப்பார்ப்பு


சிம்மம்
புதிய முயற்சிகள் பின்தள்ளபடுதல், மனதில் கவலைகள் வந்து நீங்கும், அதிக செலவுகளை மேற்கொள்ளுதல்.
மகம்: தோல்வி
பூரம்: சிக்கல்
உத்திரம் 1ஆம் பாதம்: நட்டம்


கன்னி  
நண்பர்களின் ஒத்துழைப்புக்கள் கிடைக்கும், குடும்பத்தில் உறவினர்களின் வருகையினால் மகிழ்ச்சி, நாவுக்கு சுவையான உணவு கிடைக்கும்.
உத்திரம் 2, 3, 4: ஆகாரம்
அஸ்தம்: ஒற்றுமை
சித்திரை 1, 2ஆம் பாதம்: சந்தோஷம்  


துலாம்
இசைத் துறையில் அதிக ஆர்வம் செலுத்தல், சாதுக்களின் தரிசனம் கிடைக்கப்பெரும், புதிய வேலைத்திட்டங்கள் மேன்மை அடையும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: ஆசீர்வாதம்
சுவாதி: வெற்றி
விசாகம் 1, 2, 3: ஊக்கம்


விருட்சிகம்
அதிகாரிகளின் செயல்கள் சங்கடத்தை ஏற்படுத்தும், பணவரவு ஏற்படும், நவீன முயற்சிகளினால் வெற்றி அடையலாம்.  
விசாகம் 4: அதிர்ஷ்டம்
அனுசம்: முன்னேற்றம்
கேட்டை: மனஸ்தாபம்


தனுசு
மனதில் சிறு சலனங்கள் தோன்றும், உடலில் நோய் அறிகுறிகள் ஏற்படும், அதிக அலைச்சல்கள் ஏற்படும்.  
மூலம்: சோர்வு
பூராடம்: சுகயீனம்
உத்திராடம் 1ஆம் பாதம்: சிரமம்


மகரம்
குடும்பத்தில் பெண்களின் ஆதரவு அதிகரித்தல், புதிய நட்பு தேடி வருதல், ஆரோக்கியமான ஆகாரம் கிடைக்கும்.
உத்திராடம் 2, 3, 4: நன்மை
திருவோணம்: மகிழ்ச்சி
அவிட்டம் 1, 2: நட்பு


கும்பம்
பிரயாணங்கள் செல்லுவதால் அனுகூலம், பொழுதுபோக்குகளில் ஈடுபடும் போது கவனம் தேவை,  இடமாற்றங்கள் ஏற்படும்.
அவிட்டம் 3, 4: இலாபம்
சதயம்: நிதானம்
பூரட்டாதி 1, 2, 3: சுபம்


மீனம்
புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும், பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும், தனவரவு ஏற்படும்.
பூரட்டாதி 4: உயர்வு
உத்திரட்டாதி: உபதேசம்
ரேவதி: நன்மை


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .