2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இனிமேல் அதிக எரிவாயு பயன்படுத்தினால் சிறை

Ilango Bharathy   / 2022 செப்டெம்பர் 08 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}



அண்மைக்காலமாக சுவிட்ஸர்லாந்தில் எரிவாயு தட்டுப்பாடு அதிகரித்து வருகின்றது.
 
இந்நிலையில் குளிர்காலத்தை சமாளிக்க நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் எரிவாயு குறித்த விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு சிறை தண்டனை விதிக்க சுவிட்ஸர்லாந்து அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை அல்லது அபராதங்கள் விதிக்கப்படலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.
 
புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் விதிமுறைகளின் படி, எரிவாயு மூலமாக கட்டிடங்களை வெப்பமாக்கும் வசதியுடைய பகுதிகளில் அதிகமாக 19 பாகை செல்சியஸ் வரை வெப்பப்படுத்திக் கொள்ளலாம்.

அதற்கு மேல் பயன்படுத்தக் கூடாது. மேலும் நீரை 60 பாகை செல்சியஸ் வரை வெப்பப்படுத்திக் கொள்ளலாம். இந்த விதிமுறைகளை மீறி நடக்கும் மக்கள், 30 சுவிஸ் பிராங்குகளிலிருந்து, 3000 சுவிஸ் பிராங்குகள் வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்று பெடரல் நீதித்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X