Freelancer / 2025 ஜூலை 27 , மு.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரானில் நீதித்துறை கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் உட்பட தாக்குதல்தாரிகள் என 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர் என இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது.
ஈரானின் ஜஹேதானில் உள்ள நீதித்துறை கட்டடத்தின் மீது ஜெய்ஷ் அல்-அதில் பயங்கரவாதிகள் திடீரென சரமாரி தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே ஆறு பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் பலத்த காயமுற்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு, ஜெய்ஷ் அல் -அதில் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. (a)
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025