S.Renuka / 2026 பெப்ரவரி 04 , பி.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக அளவில் புற்றுநோய்ப் பாதிப்பு 2050ஆம் ஆண்டுக்குள் 50 சதவீதம் வரை உயரக்கூடும் என தமஜழக்கத்தின் அடையாறு பகுதியிலுள்ள புற்றுநோய் மைய இயக்குநர் கல்பனா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது, உலக அளவில் புற்றுநோய்ப் பாதிப்பு அதிகரித்துவருகிறது. மாறிவரும் வாழ்வியல் முறைகளே இதற்கு முதன்மைக் காரணமாக சொல்லப்படுகிறது.
இளைஞர்களிடையே பரவி வரும் 'கூல் லிப்’ (Cool Lip) பயன்பாடு குறித்து அடையாறு புற்றுநோய் மைய இயக்குநர் கல்பனா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் இதிலும் உள்ளதால், இது நேரடியாக ரத்தத்தில் கலந்து சிகரெட்டை விடத் தீவிரமான புற்றுநோயை உருவாக்கும் காரணியாக மாறுகிறது என்கிறார் அவர். குணமாகாத வாய்ப்புண் மற்றும் தொடர் இருமல், இரண்டு வாரங்களுக்கு மேலான செரிமானப் பாதிப்பு, மலம் கழிப்பதில் திடீர் மாற்றங்கள் போன்றவை தென்பட்டால் உடனடியாகப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், புற்றுநோயைத் தடுக்கத் துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட சிப்ஸ், பிஸ்கட் மற்றும் குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டும்.
வீட்டில் சமைத்த காய்கறிகள், பழங்கள், புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதோடு, கார்போஹைட்ரேட் உணவுகளைக் குறைத்து உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
மாசு மற்றும் சோம்பேறித்தனமான வாழ்க்கை முறையைத் தவிர்ப்பதே புற்றுநோயைத் தடுப்பதற்கான முதல் கேடயம் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago