Editorial / 2025 டிசெம்பர் 17 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

உயர் மதிப்புள்ள இந்திய கரன்சிகளை கொண்டு செல்வதற்கான ஒரு தசாப்த கால தடை, முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நேபாள அரசு அறிவித்துள்ளது.
தற்போது தளர்த்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின்படி ஒரு நபர் அதிகபட்சமாக ரூ.25,000 மதிப்புள்ள 200 மற்றும் 500 ரூபாய் இந்திய நோட்டுகளை வைத்திருக்க முடியும். திங்கள்கிழமை (15) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
திருத்தப்பட்ட விதியின்படி, நேபாள மற்றும் இந்திய குடிமக்கள் இருவரும் உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை இந்தியாவிலிருந்து நேபாளத்துக்கு கொண்டு வரலாம் அல்லது நேபாளத்திலிருந்து இந்தியாவுக்கு எடுத்துச் செல்லலாம்.
இதுகுறித்து நேபாள ராஷ்டிர வங்கியின் (என்ஆர்பி) செய்தித் தொடர்பாளர் குரு பிரசாத் பவுடலின் கூறுகையில், “அரசின் முடிவு அரசிதழில் வெளியிடப்பட்டவுடன் என்ஆர்பி இதுதொடர்பான ஒரு சுற்றறிக்கையை வெளியிடும்.
இது, இந்தியாவிலிருந்து நேபாளத்துக்கு அல்லது நேபாளத்திலிருந்து இந்தியாவுக்கு பயணம் செய்யும் தனிநபர்கள் உயர்மதிப்புள்ள இந்திய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்துவதை சட்டப்பூர்வமாக்கும்’’ என்றார்.
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago