2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

கழிவறையில் கேமரா பொருத்தி ஆபாச படம் எடுத்த வைத்தியர்

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 25 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

வைத்தியசாலையின் பெண்கள் கழிவறையில் இரகசியமான முறையில் கேமரா பொருத்தி பெண்களின் அந்தரங்கத்தை நிர்வாணமாக படங்களை எடுத்தார் என்றக் குற்றச்சாட்டில் ஆண் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம், அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் அருகே  அரச மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனையின் பெண்கள் கழிவறையில் இரகசியமான முறையில் கேமரா பொருத்தப்பட்டு இருந்ததை பெண் வைத்தியர் கண்டுள்ளார்.

இது குறித்து மருத்துவமனையின் நிர்வாகத்திடம் புகார் கொடுத்தனர். அதன் பேரில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். 

இது தொடர்பாக அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது அதே மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் ரயான் சோ (வயது 28) என்ற வைத்தியர் இரவு நேரத்தில் பெண்களின் கழிவறைக்குள் சென்று வருவதை கண்டு பிடித்தனர்.

சிங்கப்பூர் வம்சாவளியை சேர்ந்தவரான அவரை பொலிஸார் கைது செய்து விசாரித்தனர்.

அப்போது அவருடைய சல்லாப புத்தி காரணமாக மருத்துவமனையின் பெண்கள் கழிவறையில் ரகசியமான முறையில் கேமரா பொருத்தி, கழிவறைக்கு செல்லும் பெண்கள் உடைகளை கழற்றும் போது, ஆபாசமாக படம் எடுத்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

2021-ம் ஆண்டு பயிற்சி வைத்தியராக பணியில் சேர்ந்ததில் இருந்து இவ்வாறு செய்து வருவதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.   

அவருடைய செல்போன் மற்றும் மடிக்கணினிகளில் இருந்த 4,500 வீடியோக்கள் கைப்பற்றப்பட்டன. 

அவர் கைது செய்யப்பட்டநிலையில் அவருடைய சிங்கப்பூர் கடவுச்சீட்டு முடக்கப்பட்டுள்ளது.

தற்போது ரூ.28 லட்சம் பிணைத்தொகை செலுத்தப்பட்டதன்பேரில் அவரை பிணையில் விடுவிக்கப்பட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X