Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 19, வியாழக்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 27 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் தீவிர மன அழுத்தம் காரணமாக தன்னுடைய பொறுப்புகள் சிலவற்றை சகோதரியிடம் ஒப்படைத்துள்ளதாக செய்தி வெளியானது.
அதைத் தொடர்ந்து தென் கொரியாவின் மறைந்த ஜனாதிபதி கிம் டே ஜாங் முன்னாள் உதவியாளரான ஜாங் சாங் மின் வடகொரியா ஜனாதிபதியான கிம் ஜாங் உன் கோமா நிலையில் இருக்கிறார். ஆனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறாரா என்பது குறித்து உறுதியாக கூற முடியவில்லை என்று கூறினார்.
இதையடுத்து தற்போது அவர் இறந்திருக்கலாம் என்ற ஊகங்கள் மீண்டும் எழுந்துள்ளன. சில மாதங்களுக்கு முன்பு இப்படி தான் பொது வெளியில் கிம் ஜாங் உன் தென்படாததால், அவர் இறந்துவிட்டார் என்று செய்தி வெளியானது.
இந்த நிலையில் ஒரு கட்சி கூட்டத்தில் திடீர் என தோன்றிய கிம் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ஒரு சூறாவளியால் நாட்டிற்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களுக்கு தயார் நிலையில் இருக்குமாறு கிம் ஜாங்-உன் வட கொரிய அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனாவை எதிர்கொள்ளும் வட கொரியாவின் நடவடிக்கையில் குறைபாடு இருப்பதாக அந்நாட்டு கிம் ஜாங் உன் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதுவரை ஒரு கொரோனா வழக்கு கூட தங்கள் நாட்டில் பதிவாகவில்லை என வட கொரியா கூறிவருகிறது, இருப்பினும் இது கண்காணிப்பாளர்களால் சந்தேகிக்கப்படுகிறது.
ஏற்கெனவே வறுமையில் வாடும் வட கொரியாவில் வைரஸின் பெரிய பரவல் பேரழிவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. அதே நேரத்தில், ‘பவி’ சூறாவளி இந்த வார இறுதியில் நாட்டைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ‘பவி’ சூறாவளி ஆகிய இரண்டையும் எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு கிம் ஜாங்-உன் வட கொரிய அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக அரசு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
49 minute ago
2 hours ago