Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2025 ஜூன் 24 , மு.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க அதிபர் டிரம்பின் போர் நிறுத்த அறிப்பைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது.
இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை அதிரடியாக சரியத் தொடங்கியுள்ளது.
இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே கடுமையான மோதல் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்தது. காசா மீது தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல், ஈரான் பயங்கரவாதிகளுக்கு உதவி வருகிறது என்று கூறி கடந்த வாரம் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதலை மேற்கொண்டது.
இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வந்தது. இரு நாடுகளும் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில் உயிரிழப்புகளும், சேதங்களும் அதிகரித்து வந்தன.
இதைத்தொடர்ந்து, இஸ்ரேலின் கோரிக்கையை ஏற்று ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேல் நாட்டின் மூன்று அணுசக்தி நிலையங்கள், ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.
அமெரிக்காவின் தாக்குதல் நடவடிக்கையால் உச்சகட்ட கோபமடைந்த ஈரான், கத்தாரில் தோகாவில் உள்ள அமெரிக்க விமானப் படைக்குச் சொந்தமான அல்-உதெய்த் விமான தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. ஆனால், இந்த தாக்குதலை கத்தார் சமாளித்துவிட்டதாகவும் பெரிய அளவு பாதிப்பு இல்லை எனவும் கூறப்படுகிறது.
ஈரானின் இந்த தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்கா மீண்டும் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாறாக இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நிறுத்தம் வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக அதிகரித்திருந்த கச்சா எண்ணெய் விலை தற்போது மீண்டும் சரியத் தொடங்கியுள்ளது.
டிரம்பின் போர் நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து அமெரிக்க பங்குச் சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது.
ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஆசிய வர்த்தகத்தின் தொடக்கத்தில் 5 சதவிகிதம் சரிந்து, 68 டாலராகக் குறைந்துள்ளது. இந்த விலை, போர் தொடங்கிய நாளான ஜூன் 12 ஆம் தேதியில் இருந்ததைவிட மிகவும் குறைவாகும்.
இருதரப்பிடையே 24 மணி நேரத்திற்குள் முழுமையான போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வரும் என்றும் இதன் மூலம் மத்திய கிழக்கில் அமைதி ஏற்படும் என ட்ரம்ப் பதிவிட்டு இருந்தார்.
இதனால் மத்திய கிழக்கில் நிலவிய பதற்றம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இஸ்ரேலுடன் போர் நிறுத்தம் எதுவும் இல்லை என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," ஒரு விஷயத்தை மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். இஸ்ரேல் தான் ஈரான் மீது போரை தொடங்கியது. தற்போதைக்கு போர் நிறுத்தம் அல்லது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை.
இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தியதால் நாங்களும் நிறுத்தியுள்ளோம். இருந்த போதும் ஈரான் தனது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த இறுதி முடிவு பின்னர் தான் எடுக்கப்படும்.
கடைசிவரை போராடிய ஈரானிய ஆயுதப்படைகளுக்கு நன்றி" என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கருத்து குறித்த சந்தேகம் எழுந்திருக்கிறது.
ஏற்கனவே இந்தியா பாகிஸ்தான் இடையேயான போரை நான் தான் நிறுத்தினேன் என ட்ரம்ப் கூறிய நிலையில் இந்தியா அதற்கு மறுப்பு தெரிவித்தது.
தற்போது இஸ்ரேல் ஈரான் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக அவர் கூறிய நிலையில் உடனடியாக அதனை ஈரான் மறுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago