Freelancer / 2024 நவம்பர் 25 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெக்சிகோவின் தபஸ்கோ மாகாணம், வில்லாஹெர்மோசா என்ற பகுதியில் மதுபான விடுதியில், ஞாயிற்றுக்கிழமை (24) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில், அறுவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விடுதியில், ஞாயிற்றுக்கிழமை (24), வழக்கம்போல் மதுபிரியர்கள் மது குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, மதுபான விடுதிக்குள் திடீரென நுழைந்த நபர் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்த்துடன், 5 பேர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .