2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

விலங்குகளைக் கொன்று குவிக்கும் எலான் மஸ்க்

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 08 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆராய்ச்சி என்ற பெயரில் அதிகளவானவிலங்குகளைக்  கொன்று குவித்து வருவதாக  டெஸ்லா , நியூராலிங் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் ஸ்தாபகரும், அதன்  தலைமை செயற்பாட்டு அதிகாரியுமான  எலோன் மஸ்கின் மீது (Elon musk) புகார் அளிக்கப்பட்டுள்ளது.

எலோன் மஸ்கின் நியூராலிங்க் நிறுவனமானது  கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் மனித மூளைக்குள் சிப் ஒன்றை பொருத்தி அதனை கணினியுடன் இணைத்து, அதன் மூலம் கணினியுடன் நேரடி உரையாடலை ஏற்படுத்துவதற்கான பரிசோதனை செய்து வருகிறது.

இப் பரிசோதனைக்காக இதுவரை செம்மறி  ஆடுகள், பன்றிகள், குரங்குகள் என சுமார் 1,500-க்கும் மேற்பட்ட விலங்குகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் , அவை கடுமையாகத்  துன்புறுத்தப்பட்டு உயிரிழப்புகளை சந்திப்பதாகவும் அந் நிறுவன ஊழியர்கள் புகார் அளித்துள்ளனர்.

இப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அமெரிக்க அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X