2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

வலைப்பந்தாட்ட போட்டியில் யாழ். மாவட்ட அரச ஊழியர்கள் அணிக்கு சம்பியன்

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 22 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

அரச ஊழியர்களுக்கிடையே இடம்பெற்ற வலைப்பந்தாட்டப் போட்டியில் யாழ். மாவட்ட அரச ஊழியர்கள் அணி தேசிய மட்டத்தில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு ரொறிங்டன் விளையாட்டு மைதானத்தில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இப்போட்டியில் யாழ்.  மாவட்ட அரச ஊழியர் அணியை எதிர்த்து கம்பஹா மாவட்ட நீதிமன்ற ஊழியர்கள் அணி விளையாடியது.

முதல் பாதி ஆட்டத்தில் 13க்கு 03 புள்ளிகள் பெற்று யாழ். மாவட்ட அரச அணி ஊழியர்கள் அணி முன்னணியிலிருந்தபோது முதல் பாதி ஆட்டம்  முடிவுற்றது.

இரண்டாம் பாதி ஆட்டத்திலும் யாழ். மாவட்ட அணி 12க்கு 02 புள்ளிகள் பெற்ற நிலையில்  இரண்டாம் பாதி ஆட்டம் முடிவுற்றது.
ஆட்ட நிறைவில் யாழ். மாவட்ட அரச ஊழியர்கள் அணி 25க்கு 05 புள்ளிகள் என்ற அடிப்படையில் வெற்றி பெற்று சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X