Kogilavani / 2016 மே 13 , மு.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவளின் முகம் பார்த்தால் போதும்
நாவுகள் கட்டுண்டு
வார்த்தைகள் சிறைப்பட்டு
வெட்கம் ஆழப் பாயும்
அக்கணத்தில்
காட்சிகள் ஏதும் தோன்றாது
மனமோ கோட்டைகட்ட
எல்லாம் மாயமாய்த் தோன்ற
மதி மயங்கிட
எங்கிருந்தோ வந்தமர்கின்றது மரியாதை...
காதல் போதையில் பிடித்த பித்து
பிதற்றுகையில் புரியும்
காற்றும் வசப்பட்டது
வானம்
அதில் உள்ள நட்சத்திரங்கள்
ஓடும் மேகம்
எல்லாமும் வசப்பட்டது
ஆயினும் பரிதாபம்
காதலைச் சொல்ல
நான்கு வார்த்தைகள் வசப்படாமற் போயிற்று
இதயமதும் துடித்தே
விழுந்து விடுமாப் போல
நெஞ்சு படபடக்க
வேர்வைத்துளிகளின் ஈரம்
உடல்பற்ற
காய்ந்த உதடுகளில் ஏதோ
மாயமாய் உரசிச் செல்கின்றது...
சொல்ல நினைக்கையில் காதல்
மிரண்டுபோகின்றது...
மாய உலகில்
அந்தரத்தில் பறந்தபடி
அவளின் நினைவுகளோடு மட்டும்
கனவில் உலாப் போகிறது
மனது...
-அசாம் அப்துல்லாஹ்
24 minute ago
34 minute ago
35 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
34 minute ago
35 minute ago
38 minute ago