Kogilavani / 2016 ஏப்ரல் 08 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
சித்திரை வருடம் பிறந்ததம்மா - இளம்
சேயிலையர் முகம் மலர்ந்ததம்மா
சித்தத்தில் இன்பம் பெருகிநிற்க - இன்று
சீரமிகுதுர்முகி வருடம் வந்ததம்மா!
பொங்கி படைத்திடும் பட்சணத்தோடு - இறையை
போற்றி வழிபடும் நாளிதம்மா!
எங்கும் ஒலித்திட வெடியோசை - இன்று
இன்முக நாளது சேர்ந்ததம்மா!
செங்கமலத் துறை லட்சுமியாள் - இல்லம்
சேர்ந்திடும் நாளதும் வந்ததம்மா!
மங்களம் பாடியே மனை சிறக்க - இனிய
துர்முகிபுத்தாண்டுமலர்ந்ததம்மா!
துர்முகிவருடம் பிறந்ததம்மா- அது மக்கள்
சந்ததம் மகிழ்ந்திடச் செய்ததம்மா!
வந்தனம் செய்துவரவேற்க-யாவரும்
வாசலில் கூடியே நிற்போமம்மா!
சிங்களவர் தமிழர் உறவினிலே-என்றும்
சீர்மைகள் பெருக வேண்டுமம்மா!
இங்கு வாழும் மக்களின் ஐக்கியமும் - தினம்
இதயத்தில் நிறைந்திட வேண்டுமம்மா!
அன்பு அகிம்சை பெருகிடட்டும் - நல்ல
அருளோடு ஆற்றலும் ஓங்கிடட்டுமா!
துன்பத் துயர் தொல்லையெல்லாம் - நீங்க
தூயதாம் துர்முகி வருடம் வழி தரட்டும்
நீதி நிலைத்து நிறைசாத்து-வரும்
தீது அகன்று அருளிடட்டும்
சாதி சமய பேத மெல்லாம் - நீங்கி
வாது சூதுகள் ஒழிந்திடட்டும்!
மூடிய முகிலது கலைந்திடவே-மலையின்
மூட்டங்கள் வாட்டங்கள் பறந்திடட்டும்
தேடிய செல்வமெம் தேயிலையால் - இந்தத்
தேசமே நன்கு செழித்திடட்டும்
நாற்றிற்கு உரமாகும் பசளைப் போல் - இந்த
நாட்டிற்கு உரமாகும் தோட்ட மக்கள்!
மாற்றுக்கு வழி தேடும் காலம் கண்டு
புதுபேற்றிற்கு வழிதேட முனைய வேண்டும்;
கடமையை கண்ணெனக் காண்பவர்கள் - கட்டாயம்
மடமையைப் பொசுக்க வேண்டும்
உடமையாய் கல்வியை உயர்த்தி எண்ணி-கற்றலால்
உயரிய சமூகத்தை காண வேண்டும்!
ஆளுக்கொரு கட்சி மாறிமாறி- புதிதாய்
நாளுக்கொரு சங்கம் தோனறி!
வாழ்வுக்கொரு பாதை காண்பிக்கவே-மலையக
வருங்காலத் தலைமைகள் இணைய வேண்டும்!
நாளொரு கட்சியில் சேர்ந்து கொண்டு–தினம்
பொழுதொரு அறிக்கையை விட்டுக் கொண்டு
மல்லுக்கட்டும் கட்சி அரசியலை - இனியும்
மலையகத்தில் கொண்டு வரவேண்டாம்! வேண்டாம் !
மோதற் தவிர்ப்புகள் நீள வேண்டும் - மண்ணை
முழுமை பயனதன் மக்களை சேரவேண்டும்!
காதற் குயிலென கைகோர்த்து-ஊரார்
கண்டிடும் நட்பது நிலைக்க வேண்டும்!
வழியதன் நீர்க்கோலம் மாறவேண்டும் - மக்கள்
மொழியதில் இன்பமும் சேரவேண்டும்!
பழிசொல்லும் காலங்கள் விலகிவிட- புது
வழிகாணும் போக்குகள் தோன்றவேண்டும்!
வடக்கு, கிழக்கு மலையகப் பூமியிலே-மலர்ந்த
வசந்த நல்லாட்சி நிலைத்து நீள வேண்டும்
அடக்குமுறையின் அடையாளமாம் - வடகிழக்கிலுள்ள
அகதிமுகாம்கள் தொலையவேண்டும் !
யுத்த நிலை இனி வேண்டாம் வேண்டாம் - இனியங்கு
இரத்தத்தின் கறைகளும் படியவேண்டாம்!
சித்தத்தைவென்றிடும் துர்முகிசித்திரையில் வெறி
பித்தத்தை மறந்து வாழ்ந்திடுவோம்
வேண்டும் வேண்டும் நல்லாட்சியென்று-புத்தாண்டை
வேண்டுதல் செய்துவரவேற்போம்!
மீண்டும் தமது நாட்டினிலே-நல்ல
மேன்மைகள் தொடர வேண்டிநிற்போம்!
நெஞ்சம் களித்திடும் சித்திரையில் - மேற்சொன்னதை
நினைவில் நடமிட வைத்திடுவோம்!
பிஞ்சு குழந்தைக்கும் அதைக்கூறி-வரும்
பிரிவினைவாதத்தை மாய்த்திடுவோம் !
அன்பைப் பெருகிநாம் அமைதியைப் பெற- அந்த
ஆயனைப் போற்றியேதுதித்திடுவோம்!
இன்புறுவாழ்வை இனம்காண–துர்முகி
இனியவருடத்தைவரவேற்போம்!
ஆக்கம் : முருகேசுபிள்ளை செல்வராஜா
24 minute ago
34 minute ago
35 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
34 minute ago
35 minute ago
38 minute ago