2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

பிரதம செயலாளரின் நியமனத்துக்கு கண்டனம்

Freelancer   / 2022 பெப்ரவரி 16 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம்

தமிழ் பேசும் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட வடக்கு, கிழக்கு மாகாண சபைகளின் பிரதம செயலாளர்களாக தமிழ் மொழி புரியாத சிங்கள அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டிருப்பதானது அரசாங்கத்தின் இனவாதப் போக்கை வலுப்படுத்துவதாக அமைந்திருக்கிறது என தென்கிழக்கு கல்விப் பேரவை கவலையும் கண்டனமும் வெளியிட்டுள்ளது.

இது குறித்து பேரவையின் தவிசாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ஏ.எல்.எம்.முக்தார் நேற்று (15) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

இலங்கை நிருவாக சேவை விசேட தர அதிகாரிகள் சேவை மூப்பு பட்டியலில் தமிழ் பேசும் அதிகாரிகள் கடமையில் உள்ள நிலையில் வடக்கு, கிழக்கு மாகாண சபைகளின் பிரதம செயலாளர்களாக சிங்கள அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டிருகின்றனர்.

இம்மாகாணங்களின் பிரதம செயலாளராக கடமையாற்ற தமிழ் பேசுவோர் எவரும் தகுதியில்லை என்பது போல் ஜனாதிபதியின் தீர்மானங்கள் அமைந்துள்ளன. எந்தளவுக்கென்றால் ஏற்கெனவே வழங்கப்பட்ட மீள் ஒப்பந்த நியமனம் முடிவுறுத்தப்பட்ட இலங்கை நிருவாக சேவை அதிகாரி துஷித வனிகசிங்க கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் கிழக்கு மாகாணத்துக்கு பிரதம செயலாளராக ஜனாதிபதியால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பொது நிருவாக அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள இலங்கை நிருவாக சேவை விசேட தர அதிகாரிகள் சேவை மூப்பு பட்டியலில் தமிழ் பேசும் அதிகாரிகள் பலர் கடமையில் உள்ள நிலையிலேயே இந்த அநியாயம் மேற்கொள்ளப்பட்டிருப்பதானது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

அண்மைக்காலமாக எமது நாட்டு ஜனாதிபதி, தான் சிங்கள மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டவர் என்பதை வலியுறுத்தி வருகின்ற நிலையில், தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு தமிழ் மொழி அறவே புரியாத சிங்கள அதிகாரிகளை அவர் பிரதம செயலாளர்களாக நியமித்துள்ளார் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X