Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2022 பெப்ரவரி 16 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
கொவிட்-19 தொற்று காரணமாக நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையிலும் மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்தினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, அட்டாளைச்சேனை உதவிப் பிரதேச செயலாளர் நஹீஜா முஸாபிர் தெரிவித்தார்.
சுவீட்சத்தின் வேலைத்திட்டத்துக்கு அமைய 2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்ட யோசனைக்க அமைய, சமுர்த்தி பயனாளிகளுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள சமுர்த்தி மானிய கொடுப்பனவு வழங்கும் வைபவம் சின்னப்பாலமுனை கிராம அபிவிருத்தி சங்கக் கட்டடத்தில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல். இமாமுதீன் தலைமையில் திங்கட்கிழமை (14) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற் கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கு வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் சிறு கைத்தொழில்களை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
சமுர்த்தி பயனாளிகள் இங்கு வழங்கப்படும் மானிய உதவிகளை வீண்விரயம் செய்யாமல் அதனுடாக தங்களது வருமானத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அரசாங்கத்தின் இலக்கினை அடைய முடியும் என்றார்.
கொவிட்-19 தொற்று காரணமாக நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையிலும் மக்களுக்குத் தேவையான அனைத்து அத்தியவசிய சேவைகளும் மற்றும் நலன்புரி சேவைகளும் அரசாங்காத்தினால் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றார்.
இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.ஜே.எம். நிஹ்மதுல்லா, சமுர்த்தி முகாமையாளர் ஏ.எம். இமாமுதீன் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
20 minute ago
24 minute ago
1 hours ago