Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Nirosh / 2021 ஜனவரி 16 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.அஷ்ரப்கான்)
சாய்ந்தமருது மாளிகைக்காடு பிரதேசத்தில் நேற்றிரவு முதல் (15) மறு அறிவித்தல் வரும்வரை, மாலை 8 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை “வீட்டுக்கு வீடு சுய தனிமைப்படுத்தல்” நடவடிக்கை சுகாதார துறையினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன் பிரதான வீதிகளில் மற்றும் உள் வீதிகளில் உள்ள அனைத்து வர்த்தக நிறுவனங்களையும் மாலை 8 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, பொதுமக்கள் தங்களது வீடுகளிலில் இருந்து வெளியேறுவதற்கும் முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாலை 6 மணிக்குப் பின்னர் பொது இடங்களில் ஒன்றுகூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டகல்களை மீறுவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென்பதோடு, அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு ஆண்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுமெனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
24 minute ago
1 hours ago
8 hours ago