2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

’’வெள்ளைவான் இறங்கியுள்ளது’’

Freelancer   / 2022 பெப்ரவரி 15 , பி.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்

கடந்த 2004 தொடக்கம் 2010, வரை நாட்டில் இருந்த வெள்ளைவான் கும்பல்களை வைத்து ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களை கடத்தியும், கொலைசெய்தும், ஆறுகளில் உடல்களை வீசியும் நடந்த சம்பவங்கள் மீண்டும் அரங்கேறுவதற்கான முன்னேற்பாடுகள் நடந்துள்ளன என்று   இலங்கை தமிழரசு கட்சி ஊடக செயலாளரும், முன்னாள் எம்.பியுமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார். 

இதன் ஆரம்பமாகவே, சிரேஷ்ட ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டின் மீது வெள்ளை வானில் வந்த ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை பார்க்கமுடிகின்றது என்றார். 
 
இலங்கையில் ஏறக்குறைய 46, ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் 36, தமிழ் ஊடகவியலாளர்களும்,08, சிங்கள ஊடகவியலாளர்களும் அடங்குகின்றனர்.  இலங்கையில் வாழமுடியாதென காரணம் காட்டி, ஊடகவியலாளர்கள் பலர், புலம்பெயர் நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

மட்டக்களப்பிலும் மாமனிதர் சிவராம், நாட்டுப்பற்றாளர் நடேசன் உள்ளிட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டதால் மட்டக்களப்பில் இருந்தும் பல ஊடகவியலாளர்கள் இங்கு வாழமுடியாமல் ஐரோப்பிய நடுகளில் தஞ்சம் அடைந்த வரலாறுகள் உள்ளன.

எஞ்சியுள்ள மட்டக்களப்பு ஊடகவியலாளர்கள் பலருக்கு புலனாய்வாளர்களாலும், படையினராலும் அடிக்கடி விசாரணைகள் என்ற போர்வையில் அழைத்து மன அழுத்த விசாரணைகளை மேற்கொண்டு வருவதை அவதானிக்க முடிகிறது.

 ஊடக சுதந்திரம், ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு என வெளிப்படையாக கூறப்பட்டாலும் மறைமுகமாக நள்ளிரவு வேளைகளில் ஊடகவியலாளர்களின் வீடுகளுக்கு வெள்ளை வானில் சென்று அச்சுறுத்தும் படுமோசமான பயங்கரம் இலங்கையில் இடம்பெற்றுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

ஊடகவியலாளர் வீட்டுக்கு முன்பாக சுதந்திரமாக வெள்ளைவேனில் சென்று கல்லெறிந்து அச்சுறுத்திய விடயம் எதிர்காலத்தில் இன்னும் பல இடங்களில் ஏற்படக்கூடிய வாய்பாக அமையும் என்பதையே இந்த சம்பவம் கோடிட்டுக்காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X