R.Tharaniya / 2025 ஒக்டோபர் 12 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடி, ஏறாவூர், மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பிரிவுகளில் 25 கிராம் ஐஸ், மற்றும் 310 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருட்களுடன் வியாபாரிகளை வெள்ளிக்கிழமை(10) அன்று இரவு கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.
மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் சம்பவ தினமான நேற்று இரவு 10.00 மணியளவில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மஞ்சந்தொடுவாய் பகுதியில் வியாபாரத்துக்கு என போதை பொருளை எடுத்துச் சென்ற 33 வயதுடைய ஒருவரை 10 கிராம் 150 மில்லி கிராம் ஐஸ் போதை பொருளுடன் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிணை அடுத்து ஏறாவூர் பிரதேசத்தில் 15 கிராம் 660 மில்லி கிராம் ஐஸ் போதை பொருளுடன் வியாபாரி ஒருவரை கைது செய்தனர்.
கல்லடி பாலத்துக்கு அருகில் கடலை வண்டிலில் கடலை வியாபாரம் செய்து வந்த கடுகன்னாவை சேர்ந்த 29 வயது இளைஞன் ஒருவரை 140 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் கைது செய்தனர்
இவ்வாறு கடந்த 4 வருடங்களாக விகாரையில் தங்கியிருந்து வீடுகளில் சரிந்து வளர்ந்து வரும் தென்னை மரங்களை இரும்பு கம்பி கேபிள் இழுத்து கட்டி வரும் நடமாடும் சேவையில் ஈடுபட்டு வரும் அல்பிட்டியைச் சேர்ந்த ஒருவரை 170 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட வியாபாரிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அந்தஅந்த பொலிஸ் நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்தஅந்த பொலிஸ் நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கனகராசா சரவணன்
01 Dec 2025
01 Dec 2025
01 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
01 Dec 2025
01 Dec 2025
01 Dec 2025