2025 நவம்பர் 19, புதன்கிழமை

20 இலட்சம் பெறுமதியான போதைப் பொருட்களுடன் வியாபரிகள் கைது

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 10 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி பிரதேசத்தில் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட நிந்தவூரைச் சேர்ந்த பெண் ஒருவர் உட்பட  3 பேரை 20 இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு கிலோ கேரளா கஞ்சா, 50 கிராம் ஐஸ் போதை பொருள் 25 கிராம் ஹெரோயின் போதைப் பொருட்களுடன் சனிக்கிழமை (9) அன்று இரவு கருவப்பங்கேணி யில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.எம். பிரியந்த பண்டார தெரிவித்தார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றிணை அடுத்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலா ரத்னாவின் ஆலோசனைக்கமைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பரியந்த பண்டாரவின் வழிகாட்டலில் பொலிஸ் பரிசோதகர் எஸ்.சந்திமா தலைமையில் பொலிஸ் கொஸ்தாப்பர்களான ஜெயசிங்க 20637, இகலகம15468, ஜெயரத்தின 53900, கொடிக்கார 40202, டிகாஷன் 90102, தேவராசா 90890; ஆகியோர் கொண்ட  குழுவினர் சம்பவ தினமான சனிக்கிழமை (08) அன்றுஇரவு கருவப்பங்கேணி அம்புறோஸ் வீதியில் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இதன் போது குறித்த வீதியில் மோட்டார் சைக்கிளில்  வந்த இருவர் உட்பட 3 பேர் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவர்களை சுற்றிவளைத்து கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து ஒரு கிலோ கேரளா கஞ்சா, 50 கிராம் ஐஸ் போதை பொருள் 25 கிராம் ஹெரோயின் போதைப் பொருட்களை மீட்டனர்.

இதில் மட்டக்களப்பு கருவேப்பங்கேணி யைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர், அம்பாறை சாய்ந்த மருதைச் சேர்ந்த 34 வயதுடைய மற்றும் நிந்தவூரைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஆகியோரை கைது செய்ததுடன் கைது செய்யப்பட்ட  நிந்தவூரைச் சேர்ந்த பெண்ணின் கணவர் போதை வியாபாரத்தில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள துடன் அவருடன் சிறையில் இருந்த  கருவப்பங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த போதை பொருள் வியாபாரியான இளைஞனுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளதாகவும்.

குறித்த இளைஞன் சிறையில் இருந்து நீதிமன்றம் பிணையில் அண்மையில் வெளிவந்த நிந்தவூரைச் சேர்ந்த பெண்ணுடனும் சாய்ந்தமருதைச் சேர்ந்த இளைஞனுடன் சேர்ந்து இந்த வியாபாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதில் கைது செய்யப்பட்டவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  தெரிவித்தார்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கனகராசா சரவணன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X