2025 பெப்ரவரி 09, ஞாயிற்றுக்கிழமை

கருத்தரிப்பதை தள்ளிப்போடும் பெண்கள்

Editorial   / 2024 பெப்ரவரி 29 , பி.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 மொத்த கருவுறுதல் விகிதம், ஒரு பெண் தன் வாழ்நாளில் பெற்றெடுக்கும் சராசரி குழந்தைகளின் எண்ணிக்கையை குறிக்கிறது.

தென் கொரியாவில் கருவுறுதல் விகிதம் சரிவு மற்றும் மக்கள் தொகை வீழ்ச்சி முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பில் உள்ள நாடுகளில், கருவுறுதல் விகிதம் கருவுறுதல் விகிதம் 1 சதவீதத்திற்கும் கீழ் உள்ள ஒரே நாடு தென் கொரியா ஆகும்.

மொத்த கருவுறுதல் விகிதம், ஒரு பெண் தன் வாழ்நாளில் பெற்றெடுக்கும் சராசரி குழந்தைகளின் எண்ணிக்கையை குறிக்கிறது. தென் கொரிய பெண்ணின் வாழ்க்கையில் சராசரியாக எதிர்பார்க்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 2022-ல் 0.78 ஆக இருந்தது. 2023-ல் 0.72 ஆக குறைந்துள்ளது என்று கொரிய புள்ளியல் தரவுகள் தெரிவிக்கின்றன.

மக்கள் தொகை வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்த போக்கை மாற்றியமைக்க அரசு பல கோடி ரூபாய் செலவு செய்கிறது. எனினும், பெண்கள் தங்கள் தொழில் முன்னேற்றம், வருமானம் மற்றும் குழந்தைகளை வளர்ப்பதற்கான செலவுகள் குறித்து அதிகம் கவலைப்படுவதால் கருத்தரிப்பதை தள்ளிப்போடுகின்றனர், அல்லது குழந்தைகளைப் பெறாமல் இருக்செய்கின்றனர். இதன் காரணமாக மொத்த கருவுறுதல் விகிதம் தொடர்ந்து சரிகிறது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X