2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

டெலிப்போனை ஆதரித்தவர்களை துவசம் செய்கிறது யானை

Ilango Bharathy   / 2021 ஜூன் 18 , மு.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை அப்பதவிகளிலிருந்து நீக்கும் நடவடிக்கைகளை, ஐக்கிய தேசியக் கட்சி எடுத்துவருகின்றது.

கட்சியினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையிலேயே, கட்சியின் உறுப்புரிமையிலிருந்து அவர்கள் நீக்கிவிட்டு, உள்ளூராட்சி மன்றங்களின் பதவிகளிலிலிருந்தும் நீக்கும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள், கடந்த​ பொதுத் தேர்தலில் போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரித்தனர்.

அத​னோர் அங்கமாக, நாவலப்பிட்டி நகர சபையின் தவிசாளர் சசங்க சம்பத், வெலிகம நகர சபையைச் சேர்ந்த ரெஹேன் விஜயரத்ன மற்றும் தங்கல்ல நகர சபையைச் சேர்ந்த ரவிந்து வெதஆராச்சி ஆகியோரே நீக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பில், தேர்தல்கள் திணைக்களத்தால் வர்த்தமானி அறிவித்தலும்
வெளியிடப்பட்டுள்ளது. ​ஐக்கிய மக்கள் சக்தியின் சின்னம் டெலிபோன் என்பதுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னம் யானை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .