2025 ஜூன் 04, புதன்கிழமை

பொலிஸ் நிலையத்தில் உயிர் இழந்த பெண்: நால்வர் பணிநீக்கம்

Freelancer   / 2023 மே 21 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில்  41வயதுடைய பெண் ஒருவர் உயிர் இழந்த சம்பவம் தொடர்பில் நான்கு பொலிஸார் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இரண்டு பெண் பொலிஸாரும் அடங்குகின்றனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேற்படி விடயமாக தகவல் தருகையில் பதுளையைச் சேர்ந்த 41 வயதுடைய பெண் கொழும்பில் உள்ள சினிமா படத் தயாரிப்பாளர் ஒருவரின் வீட்டில் வீட்டு வேலைக்காக அமர்த்தப்பட்டாள்.

அந்த வீட்டில் இருந்த தங்க நகைகள் காணாமல் போனதையடுத்து வீட்டுரிமையாளரினால் கடந்த 11ஆம்  திகதி வெலிக்கடை பொலிஸில் முறைப்பாடு ஒன்று பதியப்பட்டதையடுத்து , அவ் வீட்டு வேலைக்காரியை விசாரனைக்காக பொலிஸார்  கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.. அதன் பின்னர் அப் பெண்னை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இறந்துள்ளார்.

மேற்படி சம்பவம் தொடர்பாக பொலிஸ் மா அதிபர் தலைமையில் பொலிஸ் விசாரனையொன்றும் நடைபெற்று வருகின்றது.

அத்துடன் இறந்த பெண்னின் பிரேத அறிக்கையும் பெறப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் நான்கு பொலிஸார் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .