Super User / 2010 செப்டெம்பர் 05 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
	
அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச்சட்டம் குறித்து மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்களுக்கு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இன்று கண்டியில் விளக்கமளித்துள்ளார்.
அரசியலமைப்புத் திருத்தங்கள் தொடர்பாக, குறிப்பாக ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து, எதிர்க்கட்சிகள் தவறான விளக்கங்களை அளித்து வருவதாகவும் மகாநாயக்க தேரர்களிடம் அமைச்சர் கூறியுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியும் இன்று மகாநாக்க தேரர்களை சந்தித்து, உத்தேச அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து விபரித்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .