2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

’அச்சுறுத்தல் கட்டுப்பாட்டில் உள்ளது’

Editorial   / 2019 மே 11 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் அச்சுறுத்தல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என, இலங்கை இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு செய்தி சேவையொன்றுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியொன்றிலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களை கட்டுப்படுத்துவதற்கு, பாதுகாப்பு பிரிவினர் முன்னெடுத்த நடவடிக்கையின் மூலம் நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் எனவே, பாதுகாப்பு நிலைமை குறித்து கவலையடைய வேண்டியதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தாக்குதலுக்கு, ஐ.எஸ் அமைப்புடன் உள்ள தொடர்புகள் தெரியவந்துள்ள போதிலும், அந்த அமைப்பு நேரடியாக இந்த தாக்குதலில் தொடர்புபட்டிருப்பதாக அர்த்தமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

சஹ்ரானே, குண்டுதாக்குதல்களை தலைமை தாங்கி வழிநடத்தினார் என்பது, இதுவரை முன்னெடுக்கப்பட்டிருந்த விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ள அவர், பயங்கரவாதக் கொள்கை மற்றும் தலைமைத்துவத்துடன் வேறு முக்கியமானவர்களும் தொடர்புபட்டிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். 

தாக்குதல்தாரிகள் பெரும்பாலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெடி பொருள்களையேப் பயன்படுத்தியுள்ளனர் என்றும் சில வெடிபொருள்கள், தென் இந்தியாவின் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இருந்து பெறப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .