Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Editorial / 2019 மே 28 , பி.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
பண்டாரகம-அட்டலுகம, ஜயகொடி கந்த மற்றும் மாராவ பிரதேசங்களில் இன்று (28) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, ஆரம்ப பாடசாலை வளாகத்திலிருந்து 7 காவியுடைகள், வாள் என்பவை மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன் குறித்த பாடசாலையின் அதிபர் உள்ளிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை குறித்தப் பிரதேசத்திலுள்ள மரத் தொழிற்சாலையொன்றிலிருந்து பைபிள், காவியுடைகள் 34, காவியுடைக்கான துணிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
பாணந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சகல பொலிஸ் நிலையங்களின் அதிகாரிகள், இராணுவத்தினர் இணைந்து இச்சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
1 hours ago