Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Editorial / 2019 ஜூன் 01 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாகாண ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோருக்கு, ஒருமாதம் கட்டாய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, அமைச்சர் ரிஷாட் பதியூதீன், ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என கோரிக்கை வலுப்பெற்று வருகின்றது என்றும் இதன் ஒரு அங்கமாக, அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் ஆனால், அது இன்னும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
இந்த நிலையில், அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ், ரிஷாட் பதியூதீன் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி, கண்டியில் அதுரலிய ரத்ன தேரரால் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம், இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்வதாகவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
28 minute ago
2 hours ago
2 hours ago