Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 19, வியாழக்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 21 , பி.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பா.நிரோஸ்
அப்பாவைப் போல இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானும் பொய் பேசுவதாகத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம், கடந்த அரசாங்கத்தில் நாம் என்ன செய்தோம் என்பதை, ஒவ்வொரு தோட்டமாகச் சென்றுப் பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், “டன்சன், பொகவந்தலாவை, எல்படை ஆகிய பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கையே 500 தாண்டும். ஜீவன் தொண்டமான் கணக்கில் வீக். அப்பாவைப் போலவே பொய் பேசுகிறார். ஒவ்வொரு தோட்டத்துக்கும் சென்று பார்த்தாலே நாம் என்ன செய்திருக்கிறோம் என்பது தெரியும்” என்றும் அவர் தெரிவித்தார்.
“காணிப் பிரச்சினை பற்றி, ஜனாதிபதியின் கூறியிருந்தார். நான் அமைச்சராக இருந்த காலத்திலேயே, பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமைப் பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். கட்டுப்பொல் என்கிற முள்ளுத் தேங்காய் முற்றாக நீக்கப்படும் என்று கூறியிருந்தார்.
“தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைக்குத் தீர்வைக் கண்டு வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 19ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் தகவல்களை புதிய அரசமைப்பில் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும்.
தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதுத் தொடர்பாக அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானத்தை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago