2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் அதிரடி தீர்மானம்

Editorial   / 2019 மே 05 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில், பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ள மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க, இதற்காக தனக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகாரிகளை மாணவர்களின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்த தான் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் மறு அறிவித்தல் வரை மூடப்பட்ட பாடசாலைகள்  மீண்டும் நாளைய தினம் ஆரம்பிக்கப்படவிருக்கும் நிலையில், மாணவர்களின் பாதுகாப்புக்காக சிறந்த வேலைத்திட்டங்கள் முன்னெக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே பாதுகாப்பு தரப்பினர் நாடு முழுவதும் இரவு பகல் பாராது கடமைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், தனது பாதுகாப்புக்காக அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்கான பாதுகாப்பு அதிகாரிகளை பாடசாலை பாதுகாப்புக்காக வழங்க தான் நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .